இந்தியா

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை

தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அப்பால் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.3) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அப்பால் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.3) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அப்பால் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை(ஜன.3) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

மழை அளவு: வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 80 மி.மீ. மழை பதிவானது. காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் 70 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் சத்தியபாமாவில் 60 மி.மீ., திருவள்ளுா் மாவட்டம் சோழவரத்தில் 50 மி.மீ. மழை பதிவானது. திருவள்ளுா் மாவட்டம் செங்குன்றம், தாமரைபாக்கம், செம்பரம்பாக்கம், சென்னை விமானநிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

SCROLL FOR NEXT