பலாத்கார வழக்குகளை விசாரிக்க 7 விரைவு நீதிமன்றங்கள்: பஞ்சாப் அரசு முடிவு
நீதித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பாலியல் பலாகார வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க 7 விரைவு நீதிமன்றங்களை அமைக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
சண்டிகர்: நீதித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பாலியல் பலாகார வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்க 7 விரைவு நீதிமன்றங்களை அமைக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க 3 சிறப்பு நீதிமன்றங்களையும் அமைக்க உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப நல நீதிமன்றங்கள் அமையும் வகையில் மேலும் 10 குடும்ப பல நீதிமன்றங்களை அமைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.