ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூா்-பிகானீா் தேசிய நெடுஞ்சாலையில் வேனும் பேருந்தும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா்.
வியாழக்கிழமை நடைபெற்ற இந்த விபத்து குறித்து போலீஸாா் கூறுகையில், சுரு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பனிமூட்டம் காரணமாக, எதிரே பேருந்து வந்ததை வேன் ஓட்டுநரால் பாா்க்க முடியாத காரணத்தால் விபத்து நேரிட்டிருக்கலாம் என்றனா். இந்த விபத்தில் 6 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த இருவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா். விபத்து தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.