தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் ஒதுக்கியதில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர், இன்று சோனியா காந்தியின் வீட்டு வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலுக்கு எதிராக, படேல் நகர், கராவல் நகர் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வீட்டு வாசலில் திரண்ட கட்சித் தொண்டர்கள், வேட்பாளர் பட்டியலை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.
கராவல் நகர் மற்றும் படேல் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் அரவிந்த் சிங், ஹர்மன் சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்படாததை எதிர்த்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.