இந்தியா

பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமாகக் கிடந்த பை: பீதியடைந்த மக்கள்

செவ்வாய்க்கிழமை காலை யாத்கீர் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமாக பை ஒன்று தனியாக இருந்தது.

UNI

செவ்வாய்க்கிழமை காலை கர்னாடகத்திலுள்ள யாத்கீர் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக பை ஒன்று தனியாக இருந்தது. இது பயணிகளை பீதியில் ஆழ்த்தியது. கைவிடப்பட்டப் பையில் என்ன இருக்கும் என்றும் அது யாருடையது என்றும் தெரியாத நிலையில் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது, 

காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும், மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்தனர். அந்தப் பையைக் கைப்பற்றி பரிசோதித்த போது, அதில் துணி மற்றும் பணத்தை போலீசார் கண்டுபிடித்தனர். பஸ்ஸைப் பிடிக்கச் சென்ற பயணி யாரேனும் அவசரமாக பையை விட்டுச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திங்களன்று மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளதனால் 

தனியாக எந்தப் பையக் காணும் போதும் மக்கள் பீதியில் அடைகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT