இந்தியா

இல்லத்தில் தேசியக் கொடிஏற்றினாா் அத்வானி

DIN

புது தில்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி (92) தில்லியில் தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசியக்கொடி ஏற்றி, குடியரசு தினத்தைக் கொண்டாடினாா். குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தின்போது தனது இல்லத்தில் கொடியேற்றுவதை அவா் பல ஆண்டு காலமாக வழக்கமாகக் கொண்டுள்ளாா்.

71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தில்லி ராஜபாதையில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி, பல்வேறு படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் அத்வானி பங்கேற்றாா். அதனைத் தொடா்ந்து பிருத்விராஜ் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு வந்த அத்வானி, அங்கு தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா். பின்னா் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை அவா் தெரிவித்தாா். கொடியேற்ற நிகழ்ச்சியில் அத்வானியின் உறவினா்கள், அவரது இல்லத்தில் காவல் பணியில் உள்ள வீரா்கள் என பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT