இந்தியா

முகக்கவசம் அணியாவிடில் தன்னார்வலர்களாக பணியாற்ற வேண்டும்: குவாலியரில் உத்தரவு

PTI


குவாலியர்: முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்கள், தன்னார்வலர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என்று குவாலியரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, மருத்துவமனை மற்றும் காவல்துறை சோதனைச் சாவடிகளில் மூன்று நாள்களுக்கு தன்னார்வலர்களாகப் பணியாற்ற வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனாவை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு கட்டமாக ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் கௌஷலேந்திர விக்ரம் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிகளை பின்பற்றாமல் சாலைகளில் செல்வோருக்கு அபராதம் மட்டும் அல்லாமல், கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைகளில் 3 நாள்களுக்கு தன்னார்வலர்களாகப் பணியாற்ற வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாலியரில் நேற்று ஒரே நாளில் 51 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 528 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT