ஒடிசாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு உச்சம்; மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது 
இந்தியா

ஒடிசாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு உச்சம்; மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது

ஒடிசா மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,097 ஆக உயர்ந்துள்ளது.

IANS


புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,097 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது.

அதில், தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த 403 பேருக்கும், புதிதாக 168 பேருக்கும் நேற்று ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கஞ்சம் மாவட்டத்தில் 273 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

இதுவரை மாநிலத்தில் 6,486 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 3,557 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரோனா பாதித்து இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT