இந்தியா

மகாராஷ்டிரத்தில் 8 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய பாதிப்பு: 10 ஆயிரத்தைத் தாண்டியது மொத்த பலி

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 8,139 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய இன்றைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இன்று புதிதாக 8,139 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 223 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,46,000 ஆகவும், பலி எண்ணிக்கை 10,116 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 4,360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,36,985 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 99,202 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,370 ஆக உயர்ந்துள்ளது. இதில் 122 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,002 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT