ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுப்வாரா பகுதியில் நடைபெற்ற மோதலில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுப்வாரா பகுதியில் நடைபெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை அதிகாலையில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் நடைபெற்றது. அப்போது காவல்துறையும், பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்தில் இருந்தனர். இந்நிலையில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
மேலும் விவரங்கள் சேகரித்து வருவதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.