ஜம்மு எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் பாதுகாப்பு சூழலை ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே திங்கள்கிழமை ஆய்வு செய்கிறார்.
இன்று காலை ஜம்மு வந்த ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவணே, எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவப் படைகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராணுவ கமாண்டர்களுடன் நரவணே ஆலோசனை நடத்தவிருப்பதாகவும், இதர பணிகள் குறித்தும் கேட்டறிய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.