இந்தியா

இந்தியாவில் கூகுள் நிறுவனம் ரூ.75,000 கோடி முதலீடு: சுந்தர் பிச்சை அறிவிப்பு

DIN

டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்காக இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று கூகுள் தலைமை செயலக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் கூகுள் சார்பில் 75 ஆயிரம் கோடி ரூபாய் (சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக கலந்துரையாடினார். 

இதுகுறித்து சுந்தர் பிச்சை, 'இந்தியாவில் டிஜிட்டல் மயத்துக்கு கூகுள் உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலமாக அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ. 75,000 கோடி (சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்வோம். பங்கு முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகள் மூலமாக இதனை நிறைவேற்றுவோம்' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT