விசாகப்பட்டினம் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; ஒருவர் காயம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று இரவு நேரிட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார்.
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று இரவு நேரிட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார்.
விசாகப்பட்டினத்தின் பரவாடா பகுதியில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜேஎன் பார்மா சிட்டி வளாகத்தில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டது.
தீ விபத்து நேரிட்ட போது, தொழிற்சாலையில் மூன்று தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் காயமடைந்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.