அசாம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு; 70 லட்சம் மக்கள் பாதிப்பு
அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரம்மபுத்திரா மற்றும் கிளை ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அசாமில் வெள்ளத்தில் சிக்கி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 85 ஆக உயர்ந்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஒருபக்கம் கரோனா பரவல் காரணமாக மக்கள் பதற்றமடைந்துள்ளனர். மறுபுறம் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கும், பாதுகாப்பான இடங்களுக்கும் மாற்றப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது' என்றார்.
மேலும், அசாமில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் காசிரங்கா தேசிய பூங்காவில் ஒன்பது காண்டாமிருகங்கள் உள்பட 108 விலங்குகள் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.