இந்தியா

கேரளத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு

DIN

கேரளத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். 

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைப்பது குறித்தும் விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஜூலை 24 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலமாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,994 ஆக உள்ளது. இதில் 8,060 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

SCROLL FOR NEXT