இந்தியா

மேலும் 47 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு; பட்டியலில் பப்ஜி?

DIN

ஏற்கெனவே 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 47 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து கடந்த மாதம் அறிவித்தது. இதில், டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய செயலிகளும் அடங்கும். 

இதையடுத்து, ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 47 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, அலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தடை செய்யப்படவுள்ள செயலிகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

இந்த 47 சீன செயலிகளும் முன்னதாக தடைசெய்யப்பட்ட செயலிகளின் குளோன்களாக இயங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர மேலும் 250க்கும் மேற்பட்ட சீன செயலிகள் குறித்த பயனர்களின் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு மீறல் ஆகியவை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT