உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்து: 2 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் டிராக்டரில் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை திங்கள்கிழமை தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் டிராக்டரில் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை திங்கள்கிழமை தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஹரையா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பார்டோலியா சந்தை அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் ரங்கிரி (35), ராமேஸ்வர் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இருவரின் சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.