அயோத்தி ராமர் கோவிலின் அடித்தளத்தில் புதைக்கப்பட உள்ள ‘காலக் குளிகை’!
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் அடித்தளத்தில் ‘காலக் குளிகை’ ஒன்று புதைக்கப்பட உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியா: அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் அடித்தளத்தில் ‘காலக் குளிகை’ ஒன்று புதைக்கப்பட உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச மாநில ஆதித்ய நாத் சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் அடித்தளத்தில் ‘காலக் குளிகை’ ஒன்று புதைக்கப்பட உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவரான மஹந்த் நிரித்ய கோபால் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது:
ஆமாம்; ராமஜென்ம பூமி குறித்த வரலாறு மற்றும் உண்மைகள் பொறிக்கப்பட்ட காலக் குளிகை ஒன்று அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் அடித்தளத்தில் ஆயிரக்கணக்கான அடிகளின் கீழே வைக்கப்பட உள்ளது என்பது 100 சதவீதம் உண்மைதான். வருங்காலத்தில் எந்த விதமான சச்சரவுகளும் வராமல் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது. பிரமாண்டமான் ராமர் கோவில் இங்கு கட்டப்படும்; அதற்கான பூமி பூஜைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. காலக் குளிகை தொடர்பான வேறு எந்த தகவல்களும் எனக்குத் தெரியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காலக் குளிகை தொடர்பான தகவலை, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் ஒரே தலித் உறுப்பினரான காமேஸ்வர் சவுபால் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.