முகப்பு
இந்தியா

மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்: இந்திய வீரர்கள் மூவர் பலி

மணிப்பூரில் இந்திய - மியான்மர் எல்லையில் உள்ளூர் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்
பகிர்:


மணிப்பூரில் இந்திய - மியான்மர் எல்லையில் உள்ளூர் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சந்தல் மாவட்டத்தில் மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி மூலம் உள்ளூர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

இந்த திடீர் தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →