கரோனாவில் இருந்து மீண்ட 100 வயது மகாராஷ்டிர மூதாட்டி வீடு திரும்பினார் 
இந்தியா

கரோனாவில் இருந்து மீண்ட 100 வயது மகாராஷ்டிர மூதாட்டி வீடு திரும்பினார்

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி, கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

PTI


புணே: மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி, கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜூலை 20ம் தேதி மூதாட்டியும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கரோனா தனிமைப்படுத்தும்ட மையத்துக்கு வரும் போது, மூதாட்டிக்கு எந்த அறிகுறியோ, ஆக்ஸிஜன் குறைபாடோ இருந்திருக்கவில்லை.

ஆனால், சில நாள்களில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆனால் அவருக்கு வேறு மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காததால், சிறப்பு மையத்திலேயே தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டார். ஒரு சமயம் திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஆனால் மருத்துவர்களின் அயராத முயற்சியால் அவரது உடல்நிலை மீண்டும் சீரடைந்து, உடல்நலம் அடைந்தார். கரோனாவில் இருந்து மீண்ட நூறு வயது மூதாட்டி, கடந்த செவ்வாயன்று தனது குடும்ப உறுப்பினர்களுடன் கரோனா சிறப்பு மையத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

கரோனாவில் இருந்து மீண்டார்களா என்பதை அறிய மீண்டும் கரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டாம் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, வீடு திரும்பும் போது அந்த மூதாட்டிக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT