இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் 21 நாள்களாக உயர்வு

ANI


புது தில்லி: நாட்டில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 21 நாள்கள் ஆனது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் கரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் 64.54% ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலமும் 21 நாள்களாக உயர்ந்துள்ளது.

நாட்டில் ஒரு பக்கம், 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 55,079 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 779 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 16,38,871 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 5,45,318 ஆக உள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 35 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நாளுக்கு நாள் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், குணமடைவோர் விகிதமும் மெல்ல உயர்ந்து வருவது நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT