உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருவதை அடுத்து, கரோனாவுக்கு எதிராக கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. யாக பூஜை நடத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஹோன்னலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா, கரோனா தொற்றுக்கு எதிராக யாகம் நடத்தியுள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலம் பெற வேண்டியும், கரோனா தொற்றில்லா உலகம் மீண்டும் உருவாக வேண்டும் என்றும் அவர் பூஜை நடத்தியுள்ளார்.
பூஜையில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியினை கடைப்பிடித்ததுடன் முகக்கவசங்களை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.