இந்தியா

அசாமில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 20 பேர் பலி: பலர் காயம் 

ANI

அசாம் மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல  கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் தெற்கு அசாமில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியின் மூன்று வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 

இதில் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.  ஹைலகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு பேரும், கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10 பேர் காயமடைந்தனர். 

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT