மகாராஷ்டிரத்தில் இதுவரை 2,556 காவலர்களுக்கு கரோனா: ஒரே நாளில் 47 பேருக்குத் தொற்று
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 47 காவலர்களுக்கு கரோனா சாதகமாக உள்ளதாக அந்த மாநிலம் காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 47 காவலர்களுக்கு கரோனா சாதகமாக உள்ளதாக அந்த மாநிலம் காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 2,556 காவலர்கள் கரோனா நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 காவலர்கள் இந்த நோய்க்கு உயிரிழந்துள்ளனர்.
புதன்கிழமை காலை நிலவரப்படி இதுவரை மராட்டியத்தில் 72,300 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.