முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் கங்கன் பகுதியில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும்,

Updated On : 3 ஜூன், 2020 at 11:00 AM
பகிர்:


ஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் கங்கன் பகுதியில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

தீவிரவாதிகளிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் மொபைல் இணையம் முறிந்துள்ளது. மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.

முன்னதாக செவ்வாய்க்கிழமை, டிராலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு பெரிய அளவு வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.