இதுவரை தில்லி மெட்ரோ ஊழியர்கள் 20 பேருக்கு கரோனா பாதிப்பு
இதுநாள் வரை தில்லி - என்சிஆர் பகுதியில் தங்கியிருக்கும் 20 தில்லி மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புது தில்லி: இதுநாள் வரை தில்லி - என்சிஆர் பகுதியில் தங்கியிருக்கும் 20 தில்லி மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் தில்லி அரசின் உத்தரவுகள் கிடைக்கப் பெற்றதும், ரயில் சேவையை எந்த நேரத்திலும் தொடங்கும் வகையில் ஏராளமான தில்லி மெட்ரோ ரயில் கழகத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மெட்ரோ ரயில் நிலைய அலுவலகம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு வந்து பணியை சுமூகமாகத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலைடியில், தில்லி மற்றும் அருகே உள்ள சில நகரங்களைச் சேர்ந்த தில்லி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் 20 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.