முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூன் 20 முதல் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

கரோனா நோய் பரவல் காரணமாக உத்தரகண்டில் தள்ளிவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பாடத் தேர்வுகள் ஜூன் 20 முதல் 23 வரை நடைபெறும் என்று மாநிலம் செயலாளர் கே. மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். 

Updated On : 6 ஜூன், 2020 at 11:12 AM
vr02exam_0203chn_184_1
பகிர்:

கரோனா நோய் பரவல் காரணமாக உத்தரகண்டில் தள்ளிவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பாடத் தேர்வுகள் ஜூன் 20 முதல் 23 வரை நடைபெறும் என்று மாநிலம் செயலாளர் கே. மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். 

மேலும், விடைத்தாள்களின் மதிப்பீடு ஜூலை 15-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தின்படி தேர்வு நடைபெறும் தேதி குறித்து, சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு தெரிவிக்குமாறு மாவட்ட நீதிபதி சுந்தரம் உத்தரகண்ட் கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டில் உள்ள பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.