ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
அண்மைக் காலமாக, போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தரப்பு தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட் பிரிவில் இன்று காலை 6.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்தியத் தரப்பு பாகிஸ்தான் பகுதிகளைக் குறிவைத்து பதில் தாக்குதலில் ஈடுபட்டது.
எனினும், இந்த தாக்குதல்களில் ராணுவ வீரா்களுக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.