உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் இந்தியா 4-ஆம் இடத்தை அடைந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக, நாள்தோறும் புதிதாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
வோல்டோமீட்டர் தரவுகளின்படி, இந்தியாவில் 2,97,001 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 8,321 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 1,46,074 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக, உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா தற்போது 4-ஆம் இடத்தை அடைந்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக 2.91 லட்சம் பாதிப்புகளுடன் பிரிட்டன் 5-ஆம் இடத்தில் உள்ளது.
மத்திய அரசின் இன்றைய (வியாழக்கிழமை) சமீபத்திய அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரப்படி புதிதாக 9,996 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 357 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.