முகப்பு
இந்தியா

புதுவையில் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மேலும் ஒரு முதியவர் பலி

புதுவையில் அதிகபட்சமாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு முதியவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

புதுவையில் அதிகபட்சமாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு முதியவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் லாசுப்பேட்டை, கைக்கிளப்பட்டு, மணலிப்பட்டு, செல்லிப்பட்டு, முத்தியால்பேட்டை, வாழைக்குளம், கரியமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25 பேரும், ஜிப்மரில் 3 பேரும், காரைக்காலில் 2 பேரும் என மேலும் 30 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது அதிகபட்சமாக 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே 10  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி விவிபி நகரைச் சேர்ந்த 80 வயது முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார். அவர் ஜிப்மரில் சலவைப் பிரிவில் பணியாற்றி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவரின் தாத்தா ஆவார்.

இதன் மூலம் புதுவையில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 245 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 131 ஆகவும் உயர்ந்துள்ளது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →