இந்தியா

ஜூன் 21ல் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

வருகிற ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 

DIN

வருகிற ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 

சா்வதேச யோகா தினம் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமா் மோடியின் பரிந்துரையை ஏற்று, ஐ.நா. இதனை அறிவித்தது.

அப்போது முதல் ஒவ்வோா் ஆண்டும் நாட்டின் வெவ்வேறு நகரங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று வருகிறாா். தான் யோகாசனங்கள் செய்வது போன்ற விடியோவையும் அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யோகா, வாழ்வின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி மக்களிடையே தொடர்ந்து வலியறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT