கஜகஸ்தான் முன்னாள் அதிபர் நூர்சுல்தான் நாஸா்பயே கரோனா தொற்றில் இருந்து விரைவில் மீண்டுவர வேண்டுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கஜகஸ்தானின் முன்னாள் அதிபா் நூா்சுல்தான் நாஸா்பயேவுக்கு (79) கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். அதே நேரத்தில் அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று அவரது செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
கஜகஸ்தான் முன்னாள் அதிபா் நூா்சுல்தான் நாஸா்பயே கரோனா தொற்றில் இருந்து விரைவில் மீண்டுவர நான் வேண்டுகிறேன். கரோனா தொற்றுநோயைத் தோற்கடிக்கும் எங்கள் நண்பரின் முயற்சியில் நாங்கள் அவருடன் துணை நிற்போம் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.