கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு புதிய நடைமுறைகளும், விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அதில் சில சவால்களாகவும் அமைந்துள்ளன. அந்த வகையில், ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தும் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆனால், ரயில் பெட்டிகளின் மேல் பகுதியை சுத்தம் செய்வது என்பது மிகச் சவாலான பணியாகும்.
ஆனால் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு அதனை எளிதாக்கியுள்ளது குஜராத் மாநில ரயில்வே நிர்வாகம்.
வதோதரா ரயில் நிலையத்தில் புதிய யுக்தியைப் பயன்படுத்தி ரயில் பெட்டிகள் சுத்தப்படுத்தும் அமைப்பை உருவாக்கியுள்ளனர் அதிகாரிகள். அதன் மேலாளர் பரேஷ் சாவ்டா கூறுகையில், இதன் மூலம் ஒரு ரயில் 8 - 10 நிமிடத்தில் தூய்மைப்படுத்தப்படும். இதில் மறுசுழற்சி முறையில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் நேரமும், தண்ணீரும் மிச்சமாகிறது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.