மதுரை மாவட்டத்தில் மேலும் 94 பேருக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
கரோனா பாதிப்பு நேற்று வரை 998 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் 94 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1,082-ஐ எட்டியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்ட 405 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 574 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.