இந்தியா

மதுரையில் ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN

மதுரை மாவட்டத்தில் மேலும் 94 பேருக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

கரோனா பாதிப்பு நேற்று வரை 998 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் 94 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1,082-ஐ எட்டியுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்ட 405 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 574 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT