இந்தியா

தில்லியில் 3,390 பேர், மகாராஷ்டிரத்தில் 4,841 பேருக்கு கரோனா

DIN


தில்லியில் 3,390 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 4,841 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலங்கள் மகாராஷ்டிரம் மற்றும் தில்லி. அங்கு கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

தில்லி:

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,390 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 64 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 73,780 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 2,429 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,328 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 44,765 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 26,586 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,841 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 192 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 3,661 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 63,342 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 6,931 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 77,453 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு இறப்பு விகிதம் 4.69% ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT