கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டிய மாநிலங்களில் 12வது இடம் பிடித்தது தெலங்கானா 
இந்தியா

கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டிய மாநிலங்களில் 12வது இடம் பிடித்தது தெலங்கானா

தெலங்கானாவில் புதிதாக 891 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டிய மாநிலங்களில் 12வது இடத்தை தெலங்கானா பிடித்துள்ளது.

DIN


ஹைதராபாத்: தெலங்கானாவில் புதிதாக 891 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டிய மாநிலங்களில் 12வது இடத்தை தெலங்கானா பிடித்துள்ளது.

தெலங்கானாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,444 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,858 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கரோனா பாதித்து 225 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

புதன்கிழமை மட்டம் கரோனா பாதித்த 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். 7 பேர் குணமடைந்தனர்.

மார்ச் 2-ம் தேதி தெலங்கானாவில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்ட நிலையில், 10 ஆயிரத்தை எட்ட  115 நாள்கள் ஆகியுள்ளது. முதல் 5000 கரோனா பாதிப்பை அடைய 105 நாள்கள் ஆன நிலையில், கடந்த 9 நாள்களில் 5 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 9

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 8

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 7

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 6

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 5

SCROLL FOR NEXT