இந்தியா

மனைவியின் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளி தற்கொலை

PTI

உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சூரத்திலிருந்து திரும்பியுள்ளார் புலம்பெயர்ந்த தொழிலாளி சிவ் முராத் (30). இவரது மனைவி சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதன்காரணமாக மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இருவரிடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. 

இதையடுத்து, வாக்குவாதம் முற்றியதில் தன்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் சிவ் முராத். இந்நிலையில், அவர் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் சடலத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT