மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,318 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய இன்றைய அறிவிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 5,318 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,59,133 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 167 பேர் பலியாகியுள்ளனர். இதில் 86 பேர் கடந்த 48 மணி நேரத்தில் பலியானவர்கள். மீதமுள்ள 81 பேர் அதற்கு முந்தைய காலகட்டத்தில் பலியானவர்கள்.
அதேசமயம் இன்று மேலும் 4,430 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 84,245 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 67,600 பேர் சிகிச்சையில் உள்ளனர்.