தெலங்கானாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 983 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை அந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 983 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,419 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 4 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று 244 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 5,172 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 9,000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் 3,227 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 82,458 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.