இந்தியா

இந்தியாவில் தொடா்ந்து 6-ஆவது நாளாக 15,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு 

DIN

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 5ஆம் கட்ட பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது. எனினும் இந்தியாவில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரம், தில்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 19,459 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்மூலம் தொடா்ந்து 6-ஆவது நாளாக 15,000-க்கும் அதிகமானோருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சக தகவல்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,459 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,28,859லிருந்து 5,48,318ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 380 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 16,095லிருந்து 16,475ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 12,010 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து நாட்டில் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713லிருந்து 3,21,723ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,64,626 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 86,575 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் அங்கு கரோனாவுக்கு இதுவரை 7,429 பலியாகியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT