மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது.
தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது.
சீனா உள்பட உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது. இந்தியாவில் இதுவரை உயிர் பலி இல்லாதபோதிலும், 6 பேருக்கு கொரானா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தில் கரோனா தடுப்பு, தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
இதனிடையே கரோனா வைரஸ் தொடர்பாக தில்லி அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார்.