ஜெய்ப்பூர்: ஈரானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்ட 277 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் கூடுதல் முதன்மைச் செயலர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.
ஈரானில் சிக்கித் தவித்து வந்த ஒரு கைக்குழந்தை, 5 குழந்தைகள் உட்பட 277 பேரும் இன்று அதிகாலை ஜோத்பூர் வந்திறங்கினர்.
இவர்கள் அனைவரும் ராணுவ நல்வாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.