இந்தியா

முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், ரேஷன் பொருள்கள் இல்லை: கோவா அரசு அறிவிப்பு

முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், ரேஷன் பொருள்கள் இல்லை என கோவா அரசு அறிவித்துள்ளது. 

DIN

முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், ரேஷன் பொருள்கள் இல்லை என கோவா அரசு அறிவித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி கரோனா நோய்த் தொற்று இல்லாத மாநிலமாக கோவா இருந்து வருகிறது. கரோனா இல்லா மாநிலம் என்ற நிலையை நாம் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வெளியில் வரும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள், நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாது என்று கோவா அரசு அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை தலைமைச் செயலாளர் பரிமல் ராய் தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

SCROLL FOR NEXT