இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,263-ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாஇந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,263-ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னா் மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது சில தளா்வுகளுடன் மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,306-ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2487 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 83 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.