இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேர் பாதிப்பு; 195 பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை தகவல்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 3,900 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 3,900 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். 

இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 3,900 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 195 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிப்புஎண்ணிக்கை 46,433 ஆகவும், உயிரிழப்பு 1,568 ஆகவும் உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 1,020 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். கரோனா மீட்பு விகிதம் 27.41% ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 12,727 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்னும் சில மாநிலங்கள் உயிரிழந்தோரின் விவரத்தை அளிக்க காலதாமதமாகியுள்ளது. அந்த விவரங்கள் வந்தபிறகு தெரிவிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT