மும்பையில் 250 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு
மும்பையில் காவல்துறையில் பணியாற்றி வரும் 250 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.
மும்பை: மும்பையில் காவல்துறையில் பணியாற்றி வரும் 250 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 250 காவலர்களில் கரோனா அறிகுறி இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, அதே சமயம், கரோனா பாதித்த காவலர்களில் யாருமே தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.