தமிழகத்தில் அதிக பரிசோதனைகள்: மத்திய அரசு பாராட்டு
கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் அதிக பரிசோதனைகளை நடத்தப்பட்டு வருவதற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
புது தில்லி: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் அதிக பரிசோதனைகளை நடத்தப்பட்டு வருவதற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே ஆகியோர் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினர்.
அப்போது, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
Advertisement
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்படுவது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.