முகப்பு
இந்தியா

ஊருக்கு நடந்து செல்லும் வழியில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி; குழந்தையோடு 150 கி.மீ. நடந்தார்

மகாராஷ்டிரத்தில் இருந்து மத்தியப் பிரதேசம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளியான கர்ப்பிணிப் பெண் செல்லும் வழியிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இந்தியா

ஊருக்கு நடந்து செல்லும் வழியில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி; குழந்தையோடு 150 கி.மீ. நடந்தார்

மகாராஷ்டிரத்தில் இருந்து மத்தியப் பிரதேசம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளியான கர்ப்பிணிப் பெண் செல்லும் வழியிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:


மகாராஷ்டிரத்தில் இருந்து மத்தியப் பிரதேசம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளியான கர்ப்பிணிப் பெண் செல்லும் வழியிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

சாலையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண், வெறும் 2 மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு பெற்றெடுத்தக் கைக்குழந்தையோடு மேலும் 150 கி.மீ. நடந்து சென்றுள்ளார்.

கர்ப்பிணி தனது கணவருடன் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்னா கிராமத்துக்கு நடந்தே வந்துள்ளனர். வழியில் கடந்த செவ்வாயன்று கர்ப்பிணிக்கு கடும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாலையோரத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த அவர், 2 மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு சொந்த கிராமத்தை அடைய மேலும் 150 கி.மீ. நடந்துச் சென்றுள்ளார்.

இந்த தகவல் கிடைத்த சட்னா மாவட்ட நிர்வாகம், உடனடியாக தாயையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு தற்போது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் நடைப்பயணமாகவே சொந்த ஊர் சென்றுள்ளனர். ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்களை இயக்கினாலும், அது கையில் காசில்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →