தேசிய பொது முடக்கம் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் பணிபுரிந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்பிச் செல்வது அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பொறுமையுடன் காத்திருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் சொந்த மாநிலத்துக்கு திரும்பத் தொடங்கி விட்டனர்.
1,300 ரயில்கள்... 17,00,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்...
மே-1 முதல் மே 17 வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,300 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, 17 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். தினமும் 300 ரயில்கள் வரை இயக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.
மக்கள்தொகை:
அஸ்ஸாம் - 3.3 கோடி
பிகார் - 13 கோடி
உத்தர பிரதேசம் - 20.42 கோடி
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்:
அஸ்ஸாம் - 5 லட்சம்
பிகார் - 2.80 லட்சம்
உத்தர பிரதேசம் - 1.23 கோடி
சொந்த மாநிலம் திரும்பியவர்கள்:
அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் - 8.7 லட்சம்
பிகார் - 3 லட்சம்
உத்தர பிரதேசம் - 4.50 லட்சம்
தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள்:
அஸ்ஸாம் - 5
பிகார் - 5,162
உத்தர பிரதேசம் - 9,000
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள்:
அஸ்ஸாம் -1,000
பிகார் - 27,000
உத்தர பிரதேசம் - 40,000
கரோனா பாதிப்புள்ள தொழிலாளர்கள்
அஸ்ஸாம் -0
பிகார் - 472
அதிகபட்சமாக இயக்கப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை (மாநில வாரியாக)
பிகார் - 300
உத்தர பிரதேசம் - 526
வடகிழக்கு மாநிலங்கள் - 7
ஜார்க்கண்ட் - 5
ஒடிஸா - 52
மத்திய பிரதேசம் - 81
பிற மாநிலங்கள் - 134
அதிகபட்சமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ரயில் வழித்தடம்:
பஞ்சாப்-உத்தர பிரதேசம்
பஞ்சாப்- பிகார்
கேரளம்-பிகார்
கேரளம்-ஒடிஸா
தில்லி-மத்திய பிரதேசம்
குஜராத்-ஒடிஸா
தில்லி-பிகார்
தில்லி-மேற்கு வங்கம்
தில்லி-அஸ்ஸாம்
கர்நாடகம்-உத்தர பிரதேசம்