ஹைதராபாத்: மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்து ட்வீட் செய்ததற்காக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபு மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான மனவாதா ராய் ஒஸ்மானியா பல்கலைக்கழக காவல் நிலையத்தில் இந்தப் புகாரை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்து, நடிகர் நாகபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக அநேக மக்களின் மனம் புண்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒஸ்மானியா பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தெலங்கானா மாநில டிஜிபி மற்றும் ஹைதராபாத் காவல்துறை ஆணையரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.
அதேசமயம் அவர் புகார் சட்டஆலோசனைக்காக அனுப்பட்டுள்ளது என்று ஒஸ்மானியா பல்கலைக்கழக காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர ரெட்டி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.